வெள்ளத்தில் வாழ்க்கை அடித்து சென்றபோதும் ஓடியோடி உதவி செய்தவர் - தே.மு.தி.க. முத்துராஜ்.

in Tamil Success3 years ago

2005 மும்பை வெள்ளத்தில் தனது தொழில் எந்திரங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து சென்றபோது கலங்கிவிடாமல், அக்கம்பக்கத்தில் அகால மரணம் அடைந்த வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட உடல்களை மீட்டு இறுதி மரியாதை செய்தது உள்ளிட்ட சேவைகளை செய்தவர் தே.மு.தி.க. பிரமுகரான முத்துராஜ் தங்கசாமி (வயது52).

images (15).jpeg

ஏழை மாணவர்கள், பெண்களுக்கு உதவுவது என தொண்டு செயல்கள் ஏராளமாக செய்து வருகிறார். அவரது தொண்டு பணி, அரசியல் பணி மற்றும் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார் முத்துராஜ்.
கேப்டன் விஜயகாந்த் 2005-ல் கட்சி தொடங்கியதில் இருந்தே மராட்டிய மாநில தொண்டரணி செயலாளராக பொறுப்பில் உள்ளேன். அதற்கு முன்பே விஜயகாந்த் மீதான ஈர்ப்பில் ராஜ்ஜியம் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை மும்பையில் தொடங்கி நடத்தினேன்.

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்பதே எங்கள் தாரக மந்திரம். ஜெயலலிதா, கருணாநிதி, போன்ற பெரிய தலைவர்களின் வாழ்க்கையே கடைசி காலத்தில் மாறிவிட்டது. எனவே வாழும் காலத்தில் நல்லதை செய்ய வேண்டும்…

Read full story about: Muthuraj Thangaswamy